districts

img

மிளகாய் பயிரில் கரும்பேன் பூச்சித் தாக்குதல்: கட்டுப்பாடு விழிப்புணர்வு கருத்தரங்கம்

புதுக்கோட்டை, அக்.5 - எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவ னம் மற்றும் கேஃபி இணைந்து புதுக்கோட் டையில் ‘மிளகாயில் கரும்பேன் கட்டுப்பாடு’ பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை வெள் ளிக்கிழமை நடத்தியது. கருத்தரங்கிற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். அவர் பேசும்போது, “தென்கிழக்கு ஆசியா கரும்பேன்  மிளகாய் பயிர் மகசூலில் 85 முதல் 100 சத வீதம் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பூச்சி  தாக்குதலில் இருந்து மிளகாய் பயிரை பாது காப்பதற்காக அக்டோபர், நவம்பர் மாதங்க ளில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும்  பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நடவடிக் கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த கருத்த ரங்கம் நடத்தப்படுகிறது” என்றார். நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஆர். தீபக்குமார், வேளாண்மை அலுவலர் ந. சண்முகி, கேஃபி உலக டிஜிட்டல் ஒருங்கி ணைப்பாளர் மாளவிகா சௌத்திரி, தகவல் தொடர்பு மேலாளர் கிருத்திகா கண்ணன், பயிர் சுகாதார ஆலோசகர் மகேஷ், அறி வியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.வீர முத்து உள்ளிட்டோர் பேசினர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள அலுவ லர் டி.விமலா, பயிர் மருத்துவர் பி.செந்தில் குமார் நன்றி கூறினார்.