புதுக்கோட்டை, ஜூன் 12-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் எஸ்.எப்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியானது புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் தில் தொடங்கி, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யினை சென்றடைந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந. கோகுலப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் வசந்தகுமார், வட்டாட்சியர் விஜய லெட்சுமி, பேராசிரியர் ம.தனலெட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதிய ழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நக ராட்சி அலுவலகத்தில் குழந்தைத் தொழிலா ளர் முறையினை ஒழிப்பதற்கான உறுதி மொழியை நகர்மன்ற தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆனந்த் தலைம ையில், நகராட்சி ஆணையர் லீமா சைமன், நகராட்சி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் எடுத்தனர்.
திருச்சிராப்பள்ளி
தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12 ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சிய ரகத்தில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் திங்களன்று குழந்தைத் தொழிலா ளர் எதிர்ப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை யில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
திருவாரூர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை திருவா ரூர் புதிய ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
குழந்தைத் தொழிலாளர் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியரகம், காவல் துறை, திருவாரூர், மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகினை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கான 24 மணிநேர இலவச அவசர தொலைபேசி எண்ணான 1098-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க லாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரி வித்தார்.
ரயில் நிலையத்தில் துவங்கி பேரணி, பழைய பேருந்து நிலையம், பனகல்ரோடு, கீழ வீதி, தெற்கு வீதி வழியாக வ.சோ.ஆண்கள் மேல்நிலை பள்ளியினை சென்றடைந்தது. பேரணியில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் திங்களன்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் தலைமையில், தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலா ளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத் தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
பெரம்பலூர்
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திங்களன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடை பெற்றது.