districts

img

கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு

கும்பகோணம், அக்.6- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் தகவல் அறியும் உரிமை  சட்டம் - 2005 விழிப்புணர்வு வாரம் அக்.5 முதல்  அக்.12 வரை கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக  மேலாண்மை இயக்குநர் மோகன் தெரிவிக்கை யில், “கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-க்கான விழிப்புணர்வு பதாகை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இதேபோல் கும்பகோணம் கோட்டத்திற் குட்பட்ட கும்பகோணம், நாகப்பட்டினம், திருச்சி ராப்பள்ளி, கரூர், காரைக்குடி மற்றும் புதுக் கோட்டை மண்டலங்களில் உள்ள பேருந்து  நிலையங்கள், பணிமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்படுகின்றன. மேலும் அக்.8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. அக்.9  அன்று கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக வளாகத்தில் தகவல் அறியும் உரிமை  சட்டம்-2005 தொடர்பான நிபுணர்கள் மூலம்  பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற வுள்ளது” என்றார்.  விழிப்புணர்வு பதாகை திறப்பு நிகழ்ச்சி யில் கும்பகோணம் மண்டல பொது மேலாளர்  கே.இளங்கோவன், முதுநிலை துணை மேலாளர் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளர்  பி.கணேசன், உதவி மேலாளர் கே.நாக முத்து மற்றும் ஓட்டுநர்கள்-நடத்துநர்கள், தொழில்நுட்பம், அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.