districts

img

விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களுக்கு விருது வழங்கல்

திருவாரூர், மார்ச் 3- திருவாரூர் சீமாட்டி சில்க்ஸ் சார்பில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளைஞர்களுக்கு ‘‘வெற்றி தமிழர் விருது’’ வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வேளாண் இணை இயக்குநர் லட்சுமி காந்தன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் ஆசிப் அலி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் அப்ரார் அகமது நன்றி கூறினார். இயற்கை உழவர்கள் இயக்கம் வரதராஜன், மத்திய பல்கலைக்கழக புல முதன்மையர் வேல்முருகன், விவசாயிகள் சங்க துணை கூட்டு இயக்கம் தலைவர் காவேரி.வே.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி நிறுவனர் செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் விவசாயத்தில் ஈடுபடும் பட்டதாரி இளை ஞர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டன.