மயிலாடுதுறை, ஏப்.11- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் பொது மக்கள் மீண் டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத் தில் மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் மூலம் ஓ.என்.ஜி.சி பங்களிப்புடன் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.10 செலுத்தி னால் ‘மீண்டும் மஞ்சப்பை’ தானியங்கி முறையில் வெளியே வரும். இந்த விழிப்புணர்வு பணியினை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ. முருகதாஸ், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலா ளர் உமா மகேஸ்வரி, கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தயாள விநாய கன் அமல்ராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் கள் கோ.அர.நரேந்திரன் (பொது), ஜெயபால் (வேளாண்மை), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) அம்பிகாபதி, சமூக பாது காப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஐ.கண்மணி மற் றும் பலர் கலந்து கொண்ட னர்.