districts

img

ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் அமைப்பு

தஞ்சாவூர், அக்.3 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், பட்டுக் கோட்டை நகர ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு)  அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு தஞ்சை மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டப் பொருளா ளர் பி.என்.பேர்நீதிஆழ்வார், தஞ்சை மாநகர ஆட்டோ சங்க செயலாளர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதில் தலைவராக க.வீரசேகர், செயலாளராக பி.விவே கானந்தன், பொருளாளராக பால. விக்னேஷ்ரன் ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர். கௌரவத் தலைவராக எஸ். கந்தசாமி, சங்க ஆலோசகராக ஞானசூரியன் நியமிக்கப் பட்டனர். கூட்டத்தில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது, நலவாரிய பதிவை மேற்கொள்வது, நலத்திட்ட பயன்களை பெற்றுத் தருவது என முடிவு செய்யப் பட்டது.