திருச்சிராப்பள்ளி, ஜூலை 18 - சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட 15-வது மாநாட்டு வரவேற்பு அமைப்புக்குழு கூட்டம் ஞாயிறன்று திருவானைக்காவலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு வீரமுத்து தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்ட 15-வது மாநாட்டை ஆகஸ்ட் 27, 28 ஆம் தேதிகளில் ஸ்ரீரங்கத்தில் நடத்துவது. ஆக.27 அன்று மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தையும், ஆக. 28 அன்று பிரதிநிதிகள் மாநாட்டையும் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. வரவேற்புக் குழு தலைவராக சுப்ரமணி, செயலாளராக ரகுபதி உள்பட 25 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. இதில் சிஐடியு நிர்வாகிகள் சந்திரன், எஸ்.கே.செல்வராஜ், சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.