திருப்பூர், ஜூலை 1 - தமிழ்நாடு அரசின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற ஊழியர் கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கத்தின் சார் பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தை செயல்படுத்திட போதுமான ஊழியர் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள் ளிட்டோர் உரையாற்றினர். ஊரக வளர்ச்சித் துறை பல்வேறு நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.