districts

img

தவ்பிக் மீதான தாக்குதலைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 18-

     திருச்சிராப்பள்ளி  காட்டூர் அரியமங்கலம்  பகுதி வாலிபர் சங்கத் தோழர் தவ்பிக் மீது  கொலை வெறி தாக்குதல் நடத்திய பாஜக  ஆதரவாளர் வினோத் உள்ளிட்ட குற்றவாளி களை கைது செய்ய வலியுறுத்தி  வாலிபர் சங்கம் திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.ஜெய்கிஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.வேலவன், எம்.சலாவுதீன், பி.விஜய், கே. பகவத், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆனந்த், ஒன்றியச் செயலாளர் பாலா, தீபன் பகவத், ரஞ்சித், கக்கன் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.