முத்துப்பேட்டை, ஜுன் 12-
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ரஹமத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் புதிய தாளாளர் எஸ்.ஆர்.ஜே.இந்திரஜித், 2023-2024 ஆண்டின் துவக்க நாளான 12.6.2023 அன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின நிகழ்வில் கலந்து கொண் டார்.
முதன்மை முதல்வர் ஆர். சகுந்தலா உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத் தின் முக்கியத்துவத்தையும் குழந்தையை வேலைக்கு அமர்த்துவது குற்றம், குழந் தைத் தொழிலாளர் அவ லத்தை முற்றிலும் நம் மண்ணி லிருந்து துடைத்தெறிய நாம் உறுதி கொள்ள வேண்டும். 18 வயது வரை அனைவரும் கல்வி கற்க வேண்டும் என வலி யுறுத்தி உரையாற்றினார்.
பின்னர் தொடர்ந்து பேசிய பள்ளி முதல்வர் டிசோசா, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்க வேண் டும் என்றார். துணை முதல் வர் விஜயா புவனேஸ்வரி, குழந்தை தொழிலாளர் இல்லா நாட்டை உருவாக்க நம் பங்கை செலுத்துவோம் என்றார். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள், அனைத்துப் பிரிவு ஆசிரியர்கள், ஆசிரிய ரல்லா அலுவலக பொறுப்பாளர் கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.