மயிலாடுதுறை. செப்.22- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோயில் அருகே யுள்ள கிடாரங்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கிடங்கிலிருந்து தரங் கம்பாடி வட்டத்தில் உள்ள 94 ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட் களின் தரம், பொருட்களின் இருப்பு, நகர்வு பணி ஆகி யவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலர் கூறு கையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளி லும் தரமான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப் பட்டு வருகிறது. தொடர்ந்து தரமான ரேஷன் பொருட்கள் வழங்க வட்ட வழங்கல் அலு வலர்கள் மூலம் கண்காணிக் கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டை தாரர்கள் ரேஷன் பொருட் கள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலர்களிடம் மனுவாக அளிக்கலாம். அதனை ஏற்று புகார் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி னார். மேலும், அக்டோபர் மாதத் திற்கு ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ரேஷன் பொருட்களின் முன் நகர்வு பணியை சிறப்பாக செயல்படுத்திட தரக்கட்டுப் பாட்டு அலுவலர் ராக வனிடம் அறிவுறுத்தினார்.