மின் கம்பி அறுந்து விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு எம்.சின்னதுரை எம்எல்ஏ நேரில் அஞ்சலி
புதுக்கோட்டை, அக்.30 - கந்தர்வகோட்டை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பத்தாம் வகுப்பு பள்ளி மாண வர் திங்கள்கிழமை உயிரிழந்தார். கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் எம்.சின்னதுரை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே கோமாபுரம் ஆதிதிரா விடர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-இந்திரா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. செந்தில்குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரண்டு மகன்களையும் இந்திரா கூலி வேலை பார்த்து வளர்த்து வரு கிறார். மூத்த மகன் ராம்குமார் என்ற ராஜ்குமார் செங்கிப்பட்டியை அடுத்த முத்தாண்டிபட்டி யில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் திங்கள்கிழமை காலை, அவரது வீட்டின் அருகே நின்றபோது திடீரென மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து ராம்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற சந்திரா என்ற பெண்ணையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இருவரையும் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ராம்குமாரின் இறப்பை மருத்து வர்கள் உறுதி செய்தனர். பின்னர் மாணவரின் உடல் கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த சந்திரா சிகிச்சை பெற்று வருகிறார். கந்தர்வ கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இழப்பீடு வழங்க வலியுறுத்தல் தகவலறிந்த கந்தர்வகோட்டை தொகுதி யின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை நேரில் சென்று, இறந்த மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினார். மேலும், உயிரி ழந்த மாணவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க உடனடியாக நடவடிக்கை வேண்டுமென வலியுறுத்தி யுள்ளார்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்
மயிலாடுதுறை, அக்.30 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 2021-2023 ஆம் ஆண்டிற்கான நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் 7 நாட்கள் நடை பெற்றன. உத்திரங்குடி ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பா.சித்ரா தலைமை வகித்தார். உத்திரங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் லெனின் மேஷார் முன்னிலை வகித்தார். முகாம் திட்ட அலு வலர் சு.பார்த்திபன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியக் கழக பொருளாளர் உதயசங்கர் முகாமை தொடங்கி வைத்தார். தோட்டத்தெரு, கீழப்புதுத்தெரு, வாழைப்பட்டைத் தெரு, பங்களாத் தெரு, ப.மு.தெரு, அரசினர் ஆரம்ப சுகா தார நிலையம், விசலூர் செல்லும் சாலை, சங்கரன் பந்தல், அரசினர் தொடக்கப்பள்ளி அஞ்சலகம் தெரு, கன்னிகோயில் தெரு, அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டுத் திடலில் மாணவர்கள் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில், முகாமில் பங்கேற்ற 24 மாணவர் களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினார்.
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்ட பிரச்சார வாகனம்
திருச்சிராப்பள்ளி, அக்.30 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வேளாண்மை உழவர்-நலத்துறை சார்பில், பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்ட பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் திங்களன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், “திருச்சி மாவட்டத் திற்கு நடப்பு சம்பா சிறப்பு பருவத்திற்கு நெல், மக்காச் சோளம், பருத்தி மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு ரூ.560.20, மக்காச்சோளத் திற்கு ரூ.337.16, பருத்திக்கு ரூ.579.54. வெங்காயத்திற்கு ரூ.2063 செலுத்த வேண்டும். இதற்கு சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் ஆகிய ஆவணங்களோடு இ-சேவை மையத் திலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ பயிர் காப்பீடு செய்யலாம்” என்றார்.
நாளை கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர், அக்.30 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சி களிலும், நவ.1 (புதன்கிழமை) அன்று காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து, பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க வுள்ளனர். எனவே, கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
பாபநாசம், அக்.30 - கேரளத்தில் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பு சம்ப வத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவ ரும், பாபநாசம் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிறன்று கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடந்தது. இதில் அன்று காலை 9 மணியளவில் மூன்று இடங் களில் பயங்கர வெடி விபத்துகள் நிகழ்ந்துள்ளன. விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்முறை நிகழ்வுகள் எந்த வடிவத்தில் நடந்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த குண்டுவெடிப்பு சம்ப வத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கடும் கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பயங்கரவாத நடவ டிக்கையின் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து, கடும் தண்டனை வழங்க வேண்டும். குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும் பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரி வித்துள்ளார்.
பணியிலிருந்த கேபிள் டிவி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
விபத்து இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம் பெரம்பலூர், அக்.30 - பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அம்பேத்கர் தெரு வைச் சேர்ந்தவர் சுப்ரமணி யன் (36). இவர் கேபிள் டிவி ஒயர்கள் இழுத்துக் கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார். இவரது மனைவி சுமிதா. இவர்களுக்கு கிஷோர், கீர்த்தி என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பீல்வாடி பகுதியில் தனசேகரன் என்ப வர் நடத்தி வரும் எம்எஸ் கேபிள் டிவிக்கு கேபிள் வயர் இழுக்கும் பணிக்காக, பாடா லூர் ராமச்சந்திரன் என்பவர் மூலம் பாடாலூரில் இருந்து சுப்பிரமணியனை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அருமடல்-பீல்வாடி சாலையில் ராமச் சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் மின் கம்பங்கள் வழியாக கேபிள் டிவி ஒயர் களை பொருத்தியுள்ளனர். இதில், சுப்பிரமணியன் அலு மினியம் ஏணி மூலம் மின் கம்பத்தில் ஏறி கேபிள் டிவி ஒயரை கட்டும்போது எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் உயிரி ழந்த சுப்பிரமணியனின் உற வினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி களுக்கு தகவல் அளித்துள் ளனர். அதன்பேரில், கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ரெங்க நாதன், கோகுலகிருஷ்ணன், ஆலத்தூர் ஒன்றியச் செய லாளர் செல்லதுரை, குன்னம் செல்லமுத்து ஆகி யோருடன் அரசு மருத்துவ மனைக்கு வந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். முறைகேடாக மின் கம்பம் வழியாக கேபிள் டிவி ஒயர்களை அமைக்க வலி யுறுத்திய, அதன் உரிமையா ளர் மீது நடவடிக்கை எடுக்க வும், சுப்ரமணியனின் உயிரி ழப்புக்கு உரிய இழப்பீடு பெற்று தரக் கோரியும் உடலை வாங்க மறுத்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச மின்சாரம் வழங்குக!
கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை
அரியலூர், அக்.30 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க அமைப்புக் கூட்டம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் மணிவேல், மாவட்டத் தலைவர் செந்தில்வேல் வாழ்த்தி பேசினர். கோழி வளர்ப்பு சங்க மாவட்டத் தலைவராக வேல்முரு கன், செயலாளராக சின்னவளையம் ராஜன், பொருளாள ராக வாரியங்காவல் முருகன், துணைத் தலைவராக உட்கோட்டை கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளராக பாகல் மேடு கொளஞ்சி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோழிவளர்ப்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வங்கிக் கடன், இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவற்றை அமல் படுத்த வேண்டும். கோழியை கொள்முதல் செய்யும் கம்பெனி பாரபட்சமின்றி கோழித் தீவனத்தை வழங்க வேண்டும். விலை வாசி உயர்வு, இடுபொருள் விலை உயர்வு, ஆள்கூலியை கணக்கில் கொண்டு, கிலோவிற்கு ரூ.6.50-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கோழியை கொள்முதல் செய்யும் தனியார் கம்பெனிகளின் மிரட்டலை தடுத்து நிறுத்த வேண்டும். விழுப்புரத்தில் நவ.1 அன்று நடைபெறும் மாநில மாநாட்டில் கோழி வளர்ப்பு விவசாயிகள் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாளாடி பகுதி மீனவர்களுக்கு மீன் விற்க இடம் வழங்கப்படுமா? ஆட்சியரிடம் மனு
திருச்சிராப்பள்ளி, அக்.30 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், லால்குடி வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ராஜூ மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியில் லால்குடி வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் சுமார் 100 பேர் இருக்கிறோம். எங்களது முழுநேர தொழில் மீன்பிடித்து விற்பனை செய்வது. எங்களது குடும்ப வாழ்வா தாரம் மீன்பிடி தொழில்தான். நாங்கள் இதற்கு முன் வாளாடி கிராமம் நிர்வாக அலுவலகத்திற்கு கிழக்கும், வாளாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மேற்கிலும் சுமார் 40 ஆண்டுகளாக மீன் விற்பனை செய்து வந்தோம். கொரோனா காலத்திற்கு பின் மாவட்ட ஆட்சியரின் பரிந்து ரையின் பேரில், லால்குடி ஆர்டிஓ, தாசில்தார், ஊராட்சி மன்றத் தலைவர் மூலமாக வாளாடி சிவன்கோவில் மேற்கு பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்து, தரைக்கடை மூலம் மீன் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தனர். தற்போது, அந்த இடத்தில் மீன் விற்பனை செய்யக் கூடாது என்றுகூறி, நெடுஞ்சாலைத் துறையினர் மீன் விற்பனை செய்து வந்த இடத்தில் ஜேசிபி மூலம் குழி தோண்டி மீன் விற்பனை செய்ய முடியாமல் செய்து விட்டனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே மீன் விற்பதற்கு இடம் தேர்வு செய்து, எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நவ.15-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, அக்.30 - அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோரது சொத்துக்குவிப்பு வழக்கு நவ.15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2013 முதல் 2021 வரை 8 ஆண்டுகள் அதிமுக அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலி மலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டு வாடா, குட்கா முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படை யில் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை உட்பட பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர் 2016 முதல் 2021 வரை வருமானத்தைவிட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துகளை வாங்கிக் குவித்த தாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிந்தனர். அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் அதிரடியாக சோத னையும் நடத்தினர். இந்த சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் சான்றுகள், 19 ஹார்ட்டிஸ்க் என பல்வேறு ஆவணங்கள் கைப் பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரி வித்திருந்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும் கடந்த மே 22 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி 216 பக்க குற்றப் பத்திரிக் கையை தாக்கல் செய்தனர். மேலும், 800 சொத்துகளை வரு மானத்திற்கு அதிகமாக வாங்கி குவித்துள்ளதாகவும் ஆவ ணங்களை சமர்ப்பித்தனர். ஐந்தாவது முறையாக இந்த வழக்கு திங்கள்கிழமை புதுக் கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். குற்றப் பத்திரிக்கையின் நகலை முழுமையாக கொடுக் காததால், அடுத்த விசாரணைக்கு முன்பாக நகல் அனைத்தை யும் விஜயபாஸ்கர் தரப்பினருக்கு வழங்க வேண்டும் எனக் கூறி, வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி பூரண ஜெயஆனந்த் உத்தரவு பிறப்பித் தார்.