அரியலூர், டிச.22 - அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, தமிழ்நாடு சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழுவி னர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். அக்குழுவின் தலைவரும், பண் ருட்டி சட்டப் பேரவை உறுப்பினரு மான தி.வேல்முருகன் தலைமையில், முதன்மைச் செயலர் கி.சீனிவாசன், அரசு உறுதிமொழிக் குழு உறுப்பி னர்களும், சட்டப் பேரவை உறுப்பினர் களுமான பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை, சேலம் (மேற்கு) ரா. அருள், நாமக்கல் பெ.ராமலிங்கம் ஆகி யோர் அரியலூர் மாவட்டத்தில் செயல் படுத்தப்பட்டும் திட்டப் பணிகளை வியாழனன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து குழுத் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்கள் குழு ஆய்வு மேற்கொண்டதில் ஏற்கனவே சட்டப் பேரவையில் அளிக்கப்பட்ட 8 உறுதி மொழிகள் நிலுவையில் இருந்தன. அதில் 2 உறுதிமொழிகள் நிறைவேற் றப்பட்டுள்ளன. மீதம் 6 உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. ஒட்டுமொத்த மாக சட்ட பேரவையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் 95, அவற்றில் 43 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. பதிவு செய்யப்பட்ட உறுதி மொழிகள் 2, மீதம் இருப்பது 50 உறுதி மொழிகளாகும். 50 சதவீதத்துக்கு மேலான உறுதி மொழிகளை மாவட்ட ஆட்சியர் தலை மையிலான மாவட்ட நிர்வாகம் நிறை வேற்றி, பல்வேறு மக்கள் நலத்திட்டங் களை மக்களுடைய பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. மீதமுள்ள 50 உறுதிமொழிகள் நீதிமன்ற வழக்கு கள், நிதி சம்பந்தமானவை. அந்த உறுதிமொழிகளையும் நிறைவேற்ற அரசு உறுதிமொழிக் குழு சம்பந்தப் பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட அரசு சார்ந்த, துறை சார்ந்த ஆய்வு பணிகள் திருப்திகரமாக இருந்தன. தனியார் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வில், ஒரு சில தொழிற்சா லையில் மாசு கட்டுப்பாட்டை கட்டுப் படுத்துவதற்கும், அங்குள்ள பாய் லர்கள், சிமில்கள், மிகப்பெரிய நிறுவ னங்களின் கட்டுமானங்கள் காலாவதி யாகி இருப்பதை குழு கண்டறிந்துள்ளது. அதனால், திருச்சியிலிருந்து தொழிற்சாலைகளின் முதன்மை கண்காணிப்பாளரை வரவழைத்து, மேற்படி 8 தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலை களின் முதன்மை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (கனிமவளம்), வரு வாய்த்துறை உள்ளிட்டோர் இணைந்து கள ஆய்வு செய்ய வேண்டும். மேலும், காலாவதியான பாய்லர்கள், ஆலை உற்பத்தி திறனை எட்டுகிற கட்டு மானப் பொருள்களாக இருந்தாலும் அதை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற் கும் இக்குழு பரிந்துரைக்கிறது” என்றார். இந்நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ. க.கண்ணன் சிறைத்துறை துணைத் தலைவர் ஜெயபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.