தஞ்சாவூர்/திருச்சிராப்பள்ளி, ஜூன் 25 -
கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஜூன் 27 அன்று திருச்சி மாவட்டம் கலிங்கமுடை யான்பட்டி கிராமத்திலும், ஜூன் 28 அன்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடை பெற உள்ளது.
பட்டுக்கோட்டை வட்டம் சஞ்சய்நகர் கிராமத்தில் டி.ஜே.ஆர்-163 சஞ்சய்நகர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் அருகில் காலை 8 முதல் 1 மணி வரை நடைபெறும்.
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யம் (ஆவின்), பால்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து நடத்தும் இச்சிறப்பு மருத்துவ முகாமில், கால்நடை மருத்துவ வல்லுநர் களால், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், செயற்கை கரு வூட்டல், சினைப் பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல், சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை அளித்தல் இலவசமாக மேற் கொள்ளப்பட உள்ளன.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். மேலும் முகாம் வளாகத்தில் கண்காட்சிகள், பால் உற்பத்தி மற்றும் தரம் அபிவிருத்தி தொடர்பான கருத்தரங்க கூட்டம் நடைபெற வுள்ளது. இச்சிறப்பு முகாமில் அனைத்து கால்நடை விவசாயி களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி
ஜூன் 27 அன்று, திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றி யம், கலிங்கமுடையான்பட்டி கிராமத்தில் இந்த சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. எனவே சுற்றுப்புற கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.