தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் கலைஞர் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின்கீழ் 203 பேருக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா வழங்கினார். நிகழ்ச்சிக்கு அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார்.