districts

img

பாபநாசம் அரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

பாபநாசம், நவ.8 - தமிழக அரசால் நடத்தப்படும் கலைத் திரு விழா பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி   வளாகத்தில் நடந்து வரு கிறது.  நவ.5 முதல் 8 வரை  நடைபெற்ற கலைத் திரு விழாவில் பாபநாசம் வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் பங்கேற்று நாட்டுப்புற நடனம், இசைக் கருவிகள் வாசித்தலில் தங்களது திறனை வெளிப் படுத்தினர். இதில் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா, பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி,  பாபநாசம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  முருகன், ஊராட்சி ஒன்றியத்  தொடக்கப் பள்ளித் தலை மையாசிரியர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.