அரியலூர், மார்ச் 16- அரியலூரிலிருந்து திருச்சிக்கு இடை நில்லா பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் பேருந்து சேவையை கொடிய சைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா முன் னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்)லிட் கோட்ட மேலாளர் (பெரம்பலூர்) ஆர்.ராமநாதன், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவா ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேருந்து அரியலூரில் இருந்து காலை 6.12, 10.06, பிற்பகல் 1.45, மாலை 5.41 மணியளவிலும், திருச்சியில் இருந்து காலை 8.12, பிற்பகல் 12, 3.35, இரவு 7.55 மணியளவிலும் புறப்படுகிறது. புதிய வழித்தடங்கள் ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளையிலிருந்து, ஜெயங்கொண்டம் - தஞ்சாவூர் வரை (வழி: பொய்யூர்-கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை யும், ஜெயங்கொண்டம் - காட்டு மன்னார்குடி வரை (வழி: கல்லாத்தூர் - கல்லேரி - முருகன்கோட்டை - மாதா புரம் - இருதயபுரம் - சலுப்பை - ஆலத்திப் பள்ளம் - ஒடப்பேரி - சொக்கலிங்கபுரம் - மீன்சுருட்டி) புதிய வழித்தடத்திலும் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் கொடி யசைத்து பேருந்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.