அரியலூர், ஜன.8 - ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து நிலைப் பணியிடங்களை யும் உடனே நிரப்ப வேண்டும். வளர்ச்சித் துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிறதுறை பணிகளை முற்றாக கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோ ரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அரியலூர் அண்ணாசிலை அருகே மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத், மாவட்டச் செயலாளர் சண்முகம் உட்பட மறியலில் 36 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.