அரியலூர், ஏப்.26-
புதிய பணியாளர் களை தேர்வு செய்வதைக் கண்டித்து ஜெயங்கொண் டம் நகராட்சி அலுவல கத்தை ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி யில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை தூய்மைப்படுத்தவும், குப் பைகளை அகற்றவும் 134 ஒப்பந்தத் துப்புரவுப் பணி யாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். இந்த நிலையில் இவர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு புதிதாக 73 துப்பு ரவுப் பணியாளர்களை பணி நியமனம் செய்ய ஜெயங் கொண்டம் நகராட்சி முடி வெடுத்துள்ளது. மேலும் அதற் கான பணிகளில் அதிகாரி கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் தன்னெழுச்சி யாகத் திரண்ட நகராட்சி ஒப் பந்தத் துப்புரவுப் பணியா ளர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்ட னர்.
இதுகுறித்து போராட் டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கூறியதா வது:- ஜெயங்கொண்டம் நக ராட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங் களுக்கு 76 மாதம் வரவேண் டிய நிலுவைத்தொகை, தொழிலாளர் வைப்பு நிதி என சுமார் ரூ.5 கோடி வர வேண்டி உள்ளது. இந்த நிலையில் எங்களைப் பணி நீக்கம் செய்து புதிய துப்புர வுப் பணியாளர்களை பணி நியமனம் செய்ய இருப்பதா கக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் புதிய துப்புரவு பணியாளர் களை நியமனம் செய்ய தடை விதித்தும், ஏற்கனவே பணி யில் உள்ள துப்புரவுப் பணி யாளர்களைப் பணியாற்ற அனுமதித்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில், தீர்ப்புக் கான கடிதம் எங்களுக்கு கிடைப்பதற்கு முன்பாக புதிய துப்புரவுப் பணியா ளர்களை பணி நியமனம் செய்வதற்காக முன் தேதி யிட்டு பணி நியமன ஆணை வழங்க நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டு களாக குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகிறோம். கொரோனா காலத்தில் எங்களது உயிரையும் மதிக் காமல் மக்கள் பணியாற்றி னோம். ஆனால் இவற்றை யெல்லாம் கண்டு கொள்ளா மல் துப்புரவுப் பணியாள ருக்கு கல்வித் தகுதி, வயது நிர்ணயம் எனக் கூறி எங்க ளைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிடுகிறார்கள். எங்க ளுக்கு வேறு வாழ்வாதார மில்லை. இதை நம்பியே எங் களது குடும்பமும் உள்ளது. எனவே புதிய துப்புரவுப் பணி யாளர்களை பணி நியமனம் செய்வதை ரத்து செய்து பழைய துப்புரவு ஊழியர் களை பணியில் தொடர அனு மதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் நகர மன்றத் தலைவர் சுமதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில், துப்புரவு பணியாளர்களிடம் தாங் களே 88 பேரையும் தேர்வு செய்து கொடுங்கள் என்று கேட்டதாகவும், அதற்கு துப் புரவுப் பணியாளர்கள் 134 பேருக்கும் வேலை கொடுக்க வேண்டும் என தெரிவித்த னர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.