அறந்தாங்கி, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர்மன்ற தேர்தலில் 3 ஆவது வார்டில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.ஸ்ரீவித்யாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வார்டு முழுவதும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தலைமையில் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, வழக்கறிஞர் சங்க தலைவர் அலாவுதீன். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நாராயணமுர்த்தி, நகர செயலாளர் கணேசன், ராஜா, கிருஷ்ணன் மற்றும் மாதர் சங்கம் மும்தாஜ் பேகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலாளர் கலைமுரசு, ஒன்றிய செயலாளர் நாகமுத்து உள்ளிட் டோர் வீடுவீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர்.