districts

அறந்தாங்கி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அறந்தாங்கி, ஜூன் 1 -

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலை அடுத்த பெரு நாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை  கலந்தாய்வு மே 29 அன்று கல்லூரி முதல்வர் பேரா.வீ.பாலமுருகன் தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 1 அன்று வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவிற்கு நடைபெற்றது.

    ஜூன் 2 அன்று வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகவியல்  பாடப்பிரிவுகளின் நிரப்பப்படாத இடங்களுக்கும், ஜூன் 5 அன்று கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 6 அன்று கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளின்  நிரப்பப்படாத இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும், ஜூன் 8 அன்று தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களுக்கும், ஜூன் 9  அன்று தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களின் நிரப்பப்படாத இடங் களுக்கும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.  

   கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இணையவழி விண்ணப்ப நகல், மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றி தழ், ஆதார் அட்டை, மாணவரின் வங்கி சேமிப்பு கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆறு உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் என கல்லூரி முதல்வர் பேரா.வீ.பாலமுருகன் தெரி வித்துள்ளார்.