districts

img

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல்

புதுக்கோட்டை, மே 11-  

     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள சுமார் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய குளத்தில் சுமார் 20 முதல் 30 ஏக்கர் வரை  ஆக்கிரமிப்புகள் உள்ளதாக கூறப்படு கிறது.  

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பொது மக்களின் பங்களிப்போடு குளத்தை சீர மைத்த கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்  தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரக் கோரி அப்போதைய மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் கோரிக்கை மனு  கொடுத்தனர். அதன் பிறகும் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்படவில்லை.

    இந்நிலையில், கொத்தமங்கலம் பெரிய குளம் நீர்பாசனச் சங்கத் தலைவர் (திமுக)  முத்துத்துரை பெரியகுளம் ஆக்கிர மிப்பை அகற்றக் கோரியும், மேலும் ஏரி,  குளங்களில் வண்டல் மண் எடுக்க அனு மதி வழங்கும் போது கொடுக்கப்பட்ட விதி முறைகள், அளவுகளை கடந்து மண்  திருட்டுகள் நடப்பதை தவிர்க்க நட வடிக்கை எடுக்க கோரியும் வியா ழக்கிழமை கொத்தமங்கலம் கிழக்கு பஸ்  நிறுத்தம் அருகே சாலையின் நடுவே ஒரு  கட்டிலை போட்டு தனி ஆளாக அமர்ந்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டார்.

   இதனால், அந்த வழியாக கீரமங்கலம், மேற்பனைக்காடு, பேராவூரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்து வந்த வந்த கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.