districts

img

பேச்சு போட்டியில் இரண்டாம் இடம்: நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

அவிநாசி,டிச.12 அவிநாசி அருகே தெக்கலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி மாணவி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சு போட்டி யில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தந்தை பெரியார் பிறந்த  தினத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாண விகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட, தெக்கலூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி மாணவி மகாலட்சுமி (8 ஆம் வகுப்பு)  மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவ ருக்கு மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துவராஜ் வியாழனன்று பாராட்டுச் சான்றுதழ் மற்றும் மூன்றாயிரம் ரூபாய் காசோலை  வழங்கினார். இப்பள்ளி மாணவிக்கு கருவலூர் ஊராட்சி  மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் நாராயணசாமி,  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.