திருவாரூர், பிப்.23 - தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், சமூக போராளியுமான தோழர் பெ. சண்முகத்திற்கு கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் பாராட்டு தெரிவிக் கப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித் தார். மாநிலக் குழு உறுப் பினர் ஐ.வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற மத்தியக் குழு உறுப் பினர் பெ.சண்முகத்திற்கு கதர் ஆடை, சால்வை அணி வித்து மாவட்டக் குழு, ஒன்றியம், நகரச் செயலா ளர்கள், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் வர்க்க வெகு ஜன அரங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில், திருத்து றைப்பூண்டி நகரம் சார்பாக சிபிஎம் நகரச் செயலாளர் எம்.கோபு தலைமையில், கட்சி நிதியாக ரூ.3 லட்சம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகத்திடம் வழங்கப் பட்டது. இவர்களை தோழர் பெ.சண்முகம் பாராட்டி னார்.