தஞ்சாவூர், பிப்.26- தமிழ்ப் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் முறை யாக மாணவர் நல மையம், வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம், அஸ்கார்டியா பவுண்டேசன் நிறுவனம் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாமை துணை வேந்தர் வி.திருவள்ளுவன் துவக்கி வைத்தார். இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகை புரிந்தன. தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர் களும், தஞ்சாவூரைச் சுற்றி யுள்ள பிற கல்லூரி, பல்க லைக்கழகங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு முகாம் மூலமாக 70 தமிழ்ப் பல்க லைக்கழக மாணவர்களும், 40 பிற கல்லூரி மாணவர் களும் தேர்வு செய்யப்பட்ட னர். இவர்களில் நித்தியஸ்ரீ, இந்துமதி, திருபுவனி, அஜய் பாண்டியன், அப்துல் ரகு மான் உள்ளிட்ட மாணவர் களுக்கு துணைவேந்தர் வி. திருவள்ளுவன் பணி யாணை வழங்கினார். நிகழ்வில் பதிவாளர் தியாகராஜன், அஸ்கார் டியா நிறுவனர் இராஜ வர்ஜன், மாணவர் வேலை வாய்ப்பு வழிகாட்டி மைய இயக்குநர் பேரா.நாகராசன், மாணவர் நல மைய இயக்கு நர் சீமான் இளையராஜா. இணை இயக்குநர் வீரமணி, மா.ரமேஷ்குமர், சங்கீதா, சுரேஷ், தனலெட்சுமி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.