districts

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை, மார்ச் 5 - தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழு மையாக அர்ப்பணித்தவர்களுக்கு  தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ 100 நபர்களுக்கு வழங்கி,  தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர்  நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத் திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவ டிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக்  கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு  நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாது காப்பு நடவடிக்கை ஆகிய தலைப்புகளில்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்பு ணர்வை சிறப்பாக தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவ னங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப் பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி  நபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளமான  www.tnpcb.gov.in.  இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்கள் தேவைப் படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியா ளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,  நாகப்பட்டினம் முகவரியை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க  இறுதி நாள் மார்ச் 15, 2022 என மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தெரி வித்துள்ளார்.