districts

பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர், மே 24 -

     பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் கடன் திட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனி  நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது  பொருளாதார முன்னேற்றத்திற்கு சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண் களுக்கான நுண்கடன், ஆண்களுக் கான நுண்கடன் மற்றும் கறவை  மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்கள்  மூலம் கடன் கோரும் விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பதாரர் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு  வருமானம் ரூ.3,00,000 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண் ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வராகவும் 60 வயதுக்கு மேற்படாத வராக இருத்தல் வேண்டும். ஒரு  குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். பொது கால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15  லட்சம் வரை கடனுதவி வழங்கப்படு கிறது.

      ஆண்டு வட்டி விகிதம் 6 சத வீதம் முதல் 8 சதவீதம் வரை வசூலிக் கப்படுகிறது.  பெண்களுக்கான புதிய பொற் காலத் கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி  வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். நுண்கடன்  வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய  உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு  அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரை யும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையும் வழங்கப்படு கிறது.

     ஆண்டு வட்டி விகிதம் 4 சத வீதம் ஆகும்.  மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலரால் (மகளிர் திட்டம்) தரம் செய்யப் பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனு மதிக்கப்படுவார்கள். நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒரு வருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும் ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூ.15.00 லட்சம் வரை யும் வழங்கப்படுகிறது.

    ஆண்டு  வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். ஒரு  குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ.30,000 வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60, 000 வரை கடனுதவி வழங்கப்படு கிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சத வீதம் ஆகும்.

    மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்க ளின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட ஒன்றிய மற்றும் நகர கூட்டு றவு வங்கி கிளைகளிலும் கடன்  விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.  

    விண்ணப்பதாரர்கள் கடன் விண் ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை,  ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலகம், கூட்டுற வுச் சங்கங்களின் மண்டல இணைப்  பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டு றவுச் வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

   எனவே பெரம்பலூர் மாவட் டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட் டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும்  குழுக்கள் கடன் விண்ணப்பங் களைப் பெற்று அதை பூர்த்தி செய்து  உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.