கரூர், ஜூன் 3-
தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்தியசிறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர் கிளைச்சிறையில் காலியாக உள்ள ஒரு தூய்மை பணியாளர் பணி யிடத்திற்கு எழுத, படிக்க தெரிந் தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பணியிடத்திற்கு ஜூலை 1 அன்று 18 வயது நிரம்பி யவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 37 வய தும், எம்பிசி/பிசி பிரிவினருக்கு 34 வயதும், ஓசி பிரிவினருக்கு 32 வய தும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளருக்கு ஊதிய விகிதம் ரூ.15700 ஆகும். எனவே, தூய்மைப் பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் தங்களது சுய விவரங்களை ஜூன் 13-க்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப் பாளருக்கு அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.