districts

திருச்சி முக்கிய செய்திகள்

இடி தாக்கி மூவர் பலி

அறந்தாங்கி, நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலு காவிற்கு உட்பட்ட திருப்புனவாசல் காவல் சரகத்தில் உள்ள பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சஞ்சய் (18). சஞ்சனா (16) ஆகிய இருவரும் திருப்புனவாசலில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.  இவர்களின் சித்தப்பா (38) இளையராஜா, பள்ளி முடிந்த பின்பு, இருவரையும் தனது இருசக்கர வாகனத்தில்  பறையத்தூருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் இடி தாக்கியதில் 3 பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அவர்களை மீட்டு திருப்புன வாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி  வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர், மூவ ரும் உயிரிழந்ததை உறுதி செய்த பின், 3 பேரின் உடல் களும் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, நவ.15- திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி  நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்  பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிய ருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உத வித்தொகை வழங்கி வருகிறது.  அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், மாணவ, மாண வியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்த னையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.  முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத் தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் இன மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உத வித்தொகை இணையதளம் (Scholarship portal), புதுப்  பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும்.  புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 6.12.2022-க்குள்  இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் புதிய இனங்களுக்கு இணைய தளம் 15.12.2022 முதல் செயல்பட துவங்கும். புதிய இனங்க ளுக்கான விண்ணப்பங்கள் 20.1.2023-க்குள் இணைய தளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுக லாம் என தெரிவிக்கப்படுகிறது. அரசு இணையதளத்தில், https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes-k இத்திட்டங்கள் குறித்த  விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், நவ.15- தஞ்சாவூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக் கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், நவ.17 (வியாழக் கிழமை) அன்று காலை 11 மணியளவில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கு எண்.10 இல் நடைபெறவுள்ளது.  அன்றைய கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் இதர கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளிக்கலாம். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் அனைத்தும், உதவிகள் வாரியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உதவிகள் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து மாற்றுத் திற னாளிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி கள், தங்களது மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடை யாள அட்டை நகல், இருப்பிடத்திற்கான ஆதாரமாக குடும்ப அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப் படம்-1 மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மனு அளிக்க வேண்டும். எனவே தஞ்சாவூரில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில் மனு அளிக்க விரும்பும் மாற்றுத் திறனாளி கள் 17.11.2022 அன்று காலை 10 மணிக்குள் நேரில் வந்து  மனுக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும்,  விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலக தொலைபேசி எண்- 04362-236791-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். 

தஞ்சை எம்.பி.யிடம் லிகாய் நிர்வாகிகள் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.15-  லிகாய் தஞ்சை கோட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், தஞ்சா வூர் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்  னாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்ச ருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தை நேரில் சந்தித்துப் பேசினர்.  அப்போது, ஐ.ஆர்.டி.ஏ தற்போது எடுத்து வரும் முன்னெடுப்பு நடவடிக்கை களால், எல்ஐசி நிறுவனத்தையும், முகவர் களையும் பாதிக்கும் நிலை உள்ளது. இதன்  மூலம் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட எல்.ஐ.சி  முகவர்கள், பாலிசிதாரர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, எல்ஐசி நிறுவ னம், முகவர்கள் பாதிக்காத வகையில், நாடாளுமன்றத்தில் ஆதரவுக் குரல் எழுப்ப  வேண்டும் எனக் கோரி, லிகாய் அகில இந்  திய பொதுச் செயலாளர் பி.ஜி.திலீபன் கடி தத்தை கொடுத்து கோரிக்கை வைத்தார். நிர்வாகிகளின் கோரிக்கைகளை கேட்ட றிந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஊழி யர்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து நிற்பதாகவும், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத் துறைகளை பாதுகாப்பது மிகவும் அவ சியம் என்றார். இச்சந்திப்பில், தமிழ் மாநில லிகாய்  தலைவர் ஆர்.பூவலிங்கம், மாநிலச் செய லாளர் என்.ராஜா, தஞ்சை கோட்ட நிர்வாகி பி.தங்கமணி, தஞ்சை கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜன், ரமேஷ் மற்றும் முகவர்கள் உடனிருந்தனர்.

5 நாட்களாக மின்சாரம் இல்லை மடப்புரம் கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை, நவ.15- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள மடப்புரம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்  கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து திங்களன்று இரவு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மயிலாடுதுறை மாவட்டத்தில் அண்மை யில் பெய்த வரலாறு காணாத அதீத கன மழையால் மாவட்டம் முழுவதும் பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பா நெற்பயிர் கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகிக் கிடக்கின்றன, குடியிருப்புகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 100-க்கும் மேற்  பட்ட கிராமப் புறங்களில் மின் கம்பங்கள் விழுந்தும், மின்கம்பிகள் அறுபட்டும் கிடப்ப தால் மின்சாரம் முழுமையாக தடை பட்டுள்ளது. தற்போது சீரமைப்பு பணிகளால் ஓரளவிற்கு மீண்டும் மின்சாரம் விநியோ கம் கொடுக்கப்பட்ட நிலையில், மடப்புரம் ஊராட்சி மாஞ்சோலை கிராம மின் கம்பங்க ளில் சிறிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டும் அதை உடனே சரிசெய்யாமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். இதனால் 5 நாட்களாக மின்சாரம் இல்லா மல் ஒட்டுமொத்த கிராமமும் இருளில்  கிடப்பதாக கூறி மடப்புரம் மெயின்ரோட்டில் (ஆக்கூர் - மயிலாடுதுறை சாலை) 200-க்கும்  மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டம் குறித்து அறிந்த செம்பனார்  கோவில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், காவல் துறையினர் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, செவ்வாயன்று காலைக்  குள் சரிசெய்து விடுவோம் என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

மழைநீர் வடிகால் மூடப்படும்: அதிகாரிகள் உறுதி சிபிஎம் போராட்டம் ஒத்திவைப்பு

பொன்னமராவதி, நவ.15- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி பேருந்து நிலையம் முன்பு மெயின்  சாலையில் மழைநீர் வடிகால் என்கிற பெய ரில், பெரும் கால்வாய் வெட்டப்பட்டது. இதை கண்டித்தும், மழைநீர் வடிகாலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரியும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவ.15  அன்று காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் பொன்னமராவதி பேரூ ராட்சி மன்ற தலைவர் சுந்தரி அழகப்பன்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில், உடனடியாக மேற்கண்ட பள்ளம்  மூடப்படும். மழைக்காலம் முடிந்தவுடன்  நிரந்தர தீர்வாக நீர்வழி பாலம் அமைக் கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் திமுக நகர  செயலாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலா ளர் என்.பக்ருதீன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மதியரசி, வாலிபர் சங்க ஒன்  றிய தலைவர் கண்ணன், விவசாய சங்க  தலைவர் ராமசாமி, விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றிய தலைவர் கட்டையாண்டி பட்டி பழனியப்பன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்க மானியம்: மகளிர் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி/அரியலூர், நவ.15- தாட்கோ மூலம் பொருளாதார மேம்  பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்  தில் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும், அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால்  குவளைகள், பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல்  65 வயதுடைய ஆதிதிராவிட இனத்தை சார்ந்த பெண் பயனாளியாக இருக்க  வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3  லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. சங்க உறுப்பினர் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்  ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிட மகளிர் களாக இருப்பின் புகைப்படம், சாதிச் சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை  அல்லது இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை  ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலா ளர் அலுவலகம், தாட்கோ. ராஜா காலனி,  மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி - 620001. தொலைபேசி எண்.0431-2463969 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். அரியலூர் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் ஆதிதிராவிட மகளிர், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்குவதற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கூடுதல் விபரங்கள் பெற அரி யலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி லுள்ள அறை எண்.225, இரண்டாவது தளம்  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவல கத்தை (04329 – 228315) அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தெரி வித்துள்ளார்.

சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக  30 சதவீதம் மானியத்துடன் கடன்

திருச்சிராப்பள்ளி, நவ.15- தாட்கோ திட்டங்கள் குறித்து திருச்சி  மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பொருளா தார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்  குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்  நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முக வராக நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தொகை ரூ.3 லட்சத்தில் 30 சதவீதம் (அதாவது ரூ. 90,000) மானியத் தொகையும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்  பட உள்ளது.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்  ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு  18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.  குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் செல வினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிரா விட தனி நபர்களுக்கான திட்டத்தொகை யில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 2,25,000 லட்சம் மானியம் மற்றும் பழங்குடி யினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகை யில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 3,75,000 லட்சம் மானியம் விடுவிக்கப்படும். விண்ணப்பதாரர் மற்றும் அவர் குடும்  பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. மேற்காணும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்ப வர்கள் ஆதிதிராவிடராக இருப்பின் http:// application.tahdco.com மற்றும் பழங்  குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரி யில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.  விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப தாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பி டச்சான்று ஆகிய சான்றுகளுடன் பதிவேற்  றம் செய்யப்பட வேண்டும். இணையதளத் தில் 24 மணிநேரமும் பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கொடியேற்று விழா 

தஞ்சாவூர், நவ.15-  பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்தும், உள்நாட்டு நில முதலாளிகளிடம் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்க ளுக்காக போராடிய முதல் வீரர் பிர்சா முண்டாவின் 147-வது பிறந்த தினம் மற்றும் அகில இந்திய மாநாட்டு பிரச்சாரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் வடக்கு ஒன்றியம், பாதரக்குடி மற்றும் கச்சமங்க லம் ஆகிய கிளைகளில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கொடியினை ஒன்றியத் தலைவர் கே.காந்தி ஏற்றி வைத்தார்.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், தமிழ்நாடு  விவசாய சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் லோகநாதன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் செங்கிப்  பட்டி காந்தி நகர் கிளையில், த.வி.ச கொடியை த.வி.ச  ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.தமிழரசன் ஏற்றி வைத்தார். பூதலூர் தெற்கு ஒன்றியம், ஆச்சாம்பட்டி கிளையில் தவிச கொடியை முதுபெரும் தோழர் சங்கிலிமுத்து ஏற்றி  வைத்தார். அயோத்திப்பட்டி கிளையில் தவிச கொடி முதுபெரும் தோழர் ஏ.ஜி.தங்கவேல் ஏற்றி வைத்தார். திருச்சிராப்பள்ளி பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை திருவெள்ளறை நேதாஜி நகர் பிரிவு  சாலையில், மூத்த தோழர் முத்தையா சங்க கொடியை  ஏற்றினார். கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், முருகேசன், விவசாயிகள் சங்க ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் செல்லையா, மணிகண்டன், பாண்டியன், முத்துமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

அரியலூர், நவ.15- அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.  நாகமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்ட அளவில் நடை பெற்ற பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை யொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது. சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ கு.சின்னப்பா பங்கேற்று, படிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். ராக்கி கட்டிய மாணவர்கள் திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், குழந்தைகள் தினத்தையொட்டி திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரி யும் அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணி யாளர்கள், காவல் நிலையத்தில் உள்ள அனைத்து நிலை காவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவருக்கும் ராக்கி கட்டி குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.

பெண் குழந்தைகள்  பாதுகாப்பு விழிப்புணர்வு

அரியலூர், நவ.15- அரியலூர் மாவட்டம், கோக்குடி கிராமத்திலுள்ள புனித இன்னாசியார் உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி, உதவி  ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவலர்கள்,  பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பேசினர். மேலும், அவசரகால உதவி எண்கள் 100, 1098, 181 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சாவூர், நவ.15- பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், பேராவூரணி தர்ஷனா மருத்துவமனை இணைந்து உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் உடை யநாடு கிராமத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.  பேராவூரணி தர்ஷனா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் துரை.நீலகண்டன் சர்க்கரை நோய் விழிப்பு ணர்வு கருத்துரையாற்றினார்.

சிஐடியு முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி, நவ.15- சிஐடியு திருச்சி மாவட்ட சுவிட்ச் பாக்ஸ் தயா ரிப்பு பணியாளர்கள் சங்க துவக்க விழா, கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு ஆகிய முப்பெரும் விழா திருச்சி சங்கிலியாண்டபுரம் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. விழாவிற்கு சங்க தலைவர் ராஜா மைதீன் தலைமை  வகித்தார். சங்க கொடியை சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஏற்றினார். சங்க பெயர் பல கையை சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் திறந்து வைத்தார்.  விழாவில் சங்க செயலாளர் ஷாஜகான், துணைத் தலைவர்கள் சோலைராஜன், மோகன், துணை செயலாளர்கள் சரவணன், செந்தில் ஆகியோர் பேசி னர்.  இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜோதிகுமார் நன்றி கூறினார்.

மருத்துவப்படி வழங்கும் உத்தரவை அமல்படுத்துக! தட்சிண ரயில்வே ஓய்வூதியர்கள்  இன்று மனு கொடுக்கும் போராட்டம்

கரூர், நவ.15- தட்சிண ரயில்வே பென்சனர் சங்கத்தின் (டிஆர்பியூ) கரூர் மாவட்டக்குழு கூட்டம் கொடுமுடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மண்டல பொருளாளர் சுப்பிரமணியன், குளித்தலையில் நடந்த கூட்டத்திற்கு அன்பழகன் ஆகியோர் தலைமை வகித்தனர். டிஆர்பியூ சங்க  தலைவர் எஸ்.சாம்பசிவன், ஓய்வூதியர்கள் கோரிக்கைகளையும், அரசின் புதிய உத்தரவுகள் குறித்தும் பேசினார்.  டிஆர்பியூ சங்கத்தின் முயற்சி காரணமாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள மருத்துவப்படி வழங்கும் உத்தரவை அமல்படுத்திடக் கோரி, நவ.16 அன்று ஓய்வூதியர்கள் நேரில் சென்று மனு கொடுக்கும் போராட்டம் நடத்துவது. 65 முதல் 75 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு தலா 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திட வேண்டும். மருத்துவப்படி ரூ.3000 வழங்கிட பரிந்துரைத்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சேலம் ரயில்வே மண்டல அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைமுறையில் இருக்கும் ஜரிகை கொள்முதலை தொடர்ந்து செயல்படுத்துக!

திருபுவனம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கும்பகோணம் நவ.15- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் திருபுவனம் பட்டு  கூட்டுறவு சங்க அனைத்து நெசவு தொழிலாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் திருபுவனம் திகோ  சில்க்ஸ் அலுவலகத்தில் உள்ளி ருப்பு போராட்டம் நடைபெற்றது. திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் திருபுவனம், அம்மா சத்திரம், தேப்பெருமாநல்லூர், திரு நாகேஸ்வரம், திருவிடைமருதூர் பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் உறுப்பி னர்களாக உள்ளனர். உறுப்பினர் களின் சிரமத்தை உணர்ந்து சங்  கத்தின் மேல் தளத்தில் செயல்படும் தினசரி வரவு-செலவு பணிகளை கீழ்தளத்தில் செயல்படுத்த வேண்  டும். தமிழ்நாடு ஜரிகை 60 சத வீதம், வெளிச்சந்தை சூரத் ஜரிகை  40 சதவீதம் என்று தற்போது நடை முறையில் இருக்கும் ஜரிகை கொள்முதலை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். பட்டு கூட்டுறவு சங்கத்தில் தற்போதுள்ள வெள்ளி ஜரிகையின் உள்ளடக்கத்தை மாற்றம் செய்யா மல் இருக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நெசவாளர்களின் தொழிற்சங்கங்கள் கூட்டுக் குழு சார்பில் ஏராளமான கைத்தறி நெச வாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். போராட்டத்தில் தஞ்சை மாவட்ட தமாகா நெசவாளர் பிரிவு  தலைவர் வி.நாராயணசாமி, சிஐ டியு என்.பி.நாகேந்திரன், ஏஐடியுசி ஜி.மணிமூர்த்தி, அதிமுக எம்.ஆர். ராஜசேகரன், ஜனதா தளம் ஜெ.கே. மனோகரன், காங்கிரஸ் கே.வி.துளசிராமன், பா.ஜ.க எஸ்.ராம கிருஷ்ணன், மதிமுக டி.சரவணன், அமமுக டி.துளசிராஜ், வேலுநாச்சி யார் தொழிற்சங்க என்.பி.சரவ ணன், மக்கள் நீதி மய்யம் ஜெ.ஜெ. அசோகன், தேமுதிக எஸ்.ஆர்.சர வணன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால், மாவட்ட துணைத்  தலைவர் ஜீவபாரதி, கூட்டுறவு சங்க  மாவட்ட செயலாளர் சேகர், பக்கிரி சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர். நெசவாளர்களின் போராட்  டத்தை தொடர்ந்து, திருவிடைமரு தூர் வட்டாட்சியர் மற்றும் சங்க நிர்வாகத்தினர் நேரில் வந்து விவ ரங்களை கேட்டறிந்தனர். சம் பந்தப்பட்ட துறையிடம் பேசி உட னடியாக தேர்வு காண வழிவகை செய்யப்படும் என தெரிவித்தனர்.  மேலும், போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்றான, ‘நெசவாளர்களுக்கு வசதியாக வரவு-செலவு பகுதியை கீழ்த்  தளத்தில் அமைத்துக் கொடுப்ப தாக’ நிர்வாகம் உறுதியளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.