districts

img

ஆண்டனி ஐஸ் பிளாண்டிற்கு ‘சிறந்த தொழில் முனைவோர்’ விருது

மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் பொறையார் நண்டலாறு அருகே ஆண்டனி ஐஸ் பிளாண்ட் என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஐஸ் தயாரிக்கும் தனி யார் நிறுவனத்திற்கு   2021 - 2022 ஆம் ஆண்டிற் கான மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது தமிழக அரசால்  வழங்கப்பட்டுள்ளது.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறை சார்பில் மாவட்ட அளவில்  சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும்  விழா சென்னையில் நடைபெற்றது. விழா வில் தரங்கம்பாடி வட்டம், பொறையாறை அடுத்துள்ள நண்டலாறு அருகே செயல் பட்டு வரும் ஆண்டனி ஐஸ் பிளாண்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த தொழில் முனைவோராக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.  விருதினை அதன் உரிமையாளர் வேம்பு தமிழ்மணி பெற்றுக் கொண்டார். குறு,  சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதுக் கான கேடயத்தையும், சான்றிதழையும் வழங்கி கௌரவித்தார். விருது பெற்றுள்ள இந்நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் செயல்படுவதோடு ஏராள மான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை சிறந்த முறையில் வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.