கரூர், மே 10 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்ற மகேந்திரகுமார், சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அனைத்து பணியா ளர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார். தொழிலாளர் களையும், தொழிற்சங்கத்தையும் அவ தூறாக பேசி வருகிறார். வெயில் கடுமையாக உள்ள நிலை யில், அனைத்து நகர் பேருந்துகளை யும் முழுநேரமும் இயக்க கட்டாயப் படுத்துகிறார். நடத்துநர்கள் முன் இருக்கையில் அமரக்கூடாது என உத்த ரவு போடுகிறார். நடத்துநர் இருக்கை என்பது உயிர் பலிக்கு பின்பு பெறப் பட்ட உரிமையாகும். தேர்தல் நடை முறை அமலில் இருக்கும்போது, தன்னிச் சையாக வாய்மொழி உத்தரவு மூலம் பணி நிலைமைகளில் மாற்றம் செய்கிறார். தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்காமல் அவர்களின் வாழ்வா தாரத்தை கேள்விக்குறியாக்குவதை கண்டித்தும், சம்பள பட்டுவாடா சட்டத் திற்கு எதிராக சம்பள ரசீதில் உள்ள விடுப்பு விவரங்களை நீக்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் (சிஐடியு) கரூர், திருச்சி மண்டலங்கள் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. கரூர் மண்டல போக்குவரத்து அலு வலகம் முன்பு நடைபெற்ற கூட்டத் திற்கு சங்கத்தின் கிளைச் செயலாளர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம், மாவட்டச் செயலாளர் சி.முரு கேசன், திருச்சி மண்டல தலைவர் சீனி வாசன், மண்டல பொது செயலாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.