தஞ்சாவூர், ஏப்.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விழா அரங்கில், முத்தமிழ் விழா மற்றும் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வர் (பொ) சி.ராணி தலைமை வகித்தார். முத்தமிழ் விழாவில் முனைவர் ஜெ.உமா வரவேற்றார். திருச்சி நற்றமிழ் முல்லை தமிழ் சங்கம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனை வர் ரஞ்சனி இலக்கிய மன்றப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாவில் முனைவர் நா.பழனிவேலு வரவேற்றார். பேராவூரணி எம்எல்ஏ நா. அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கேடயம், சான்றிதழ் வழங்கி வாழ்த்திப் பேசினார். பேரா சிரியர் ப.ஞானசேகரன் நன்றி கூறினார்.