districts

img

அண்ணா பல்கலை. மாணவியின் பெயரில் அரசியல் ஆதாயம் தேடிய பாஜக!

மதுரை, ஜன.3- சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் கொடுமைக்கு உள்ளானது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக  இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட  பல்வேறு அமைப்புகள் போராட்டங் களை முன்னெடுத்தன.  ஆனால், பாஜக இந்த சம்ப வத்தை அரசியல் லாபத்திற்காக பயன்  படுத்தியது. மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு மதுரையிலி ருந்து சென்னை நோக்கி “பாஜக மக ளிரணி நீதிப் பேரணி நடைபயணம்” மேற்கொள்வதாகவும் ஜன.3-ஆம் தேதி மதுரை செல்லத்தம்மன் கோயில்  (கண்ணகி கோயில்) முன்பிருந்து நடை பயணம் புறப்படும் எனவும், காவல்  துறை அனுமதிக்கவில்லையென்றா லும் தடையை மீறிச் செல்வோம் என வும் கூறியிருந்தது. பக்தர்கள்-வியாபாரிகள் தவிப்பு காலை 9.15 மணி முதல் பாஜக மகளிர் பிரிவினர் செல்லத்தமன் கோயில் முன்பு திரள தொடங்கினர். இதனால் வழக்கமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடி யாமல் காலை 11.45 மணி வரை தவித்த னர். மேலும், 200-க்கும் மேற்பட்ட  காவலர்கள் வேறு குவிக்கப்பட்டிருந்த தால் அப்பகுதி மக்களின் இயல்பு  நிலையும், கடைகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. கோவில் வாசலில் பெண்கள் உரலில் மிளகாயை போட்டு இடிப்பதும், அம்மியில் மிளகாயை  வைத்து அரைப்பதும், கல்யாண வீடு களில் வாசிக்கும் பேண்டு வாத்திய  இசை முழக்கங்களுடன் தீச்சட்டி எடுப்பதும் நடந்ததை ஊடகங்கள் காட்சிப்படுத்தத் தொடங்கியவுடன் அவ்வப்போது முழக்கங்களை எழுப்புவதும் பின்னர் அமைதியா வதும் தொடர்ந்தது. கண்ணகி சிலம்பிலும் நாடகம் காலை 10 மணி அளவில் பெண்கள்  மாறி மாறி இரண்டு சிலம்புகளை இரண்டு கைகளிலும் ஏந்தி “அண்ணா  பல்கலை மாணவியின் துயரம் நீங்கிட  கண்ணகியே எழுந்தருளு” என கோஷ மிட்டனர். அப்போது திருநெல்வேலி  மாவட்டம் பாளையங்கோட்டையிலி ருந்து பரதநாட்டியக் கலைஞர் உமா  அபிராமி கூட்டத்தினரிடையே தோன்றி சிலம்பை கையில் ஏந்தி பெண்ணுக்கு நீதி கேட்கிறேன் என்று கூறி சிலம்பை கையில் ஏந்தி சில நிமி டங்கள் போஸ் கொடுத்தார். நீங்கள் பாஜக உறுப்பினரா என நமது செய்தி யாளர் கேட்டதற்கு, “நான் பாஜகவில்  உறுப்பினர் இல்லை. இந்த நிகர்ச் சிக்கு அழைத்தார்கள் வந்தேன்” என்றார்.  நிகழ்வின் முடிவில் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்டபோது அவர், நான் கட்சிக்காரர் இல்லை. என்னை விடுங்கள் என்று அழுதது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாய் குஷ்பு காலை 11.02  மணிக்கு மேடை ஏறினார். அவர் பேசு கையில், நாங்கள் விளம்பரத்திற்காக இந்தப் போராட்டம் நடத்தவில்லை. பெண்களுக்கு திட்டமெல்லாம் அறிவிக்கிறீர்கள். பெண்களை பாது காத்துக் காப்பாற்றுங்கள். இந்தப் போராட்டம் ஒரு ஆரம்பம் தான். ஒவ்வொரு பெண்ணும் கண்ணகி தான். பாஜக-தான் உண்மையைப் பேசு கிறது. உண்மையைப் பேசுவதால் தமிழ்நாடு அரசு எங்களது போராட்டங்  களுக்கு அனுமதி தர மறுக்கிறது. திமுக அரசு பயத்தில் உள்ளது. திமுக அரசு எதையுமே செய்யவில்லை. கேட்டால் மோடி அரசு மீது பழி போடு கின்றனர் என்றார். முன்னதாகப் பேசிய மகளிர் அணி மாநில தலைவர்களில் ஒருவரு மான உமா ரதி , இது பாஜக நடத்தும்  அரசியல் போராட்டமல்ல. இது ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றார். தொடர்ந்து பேசிய அவர், 2026-இல்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை முதல்வராகி விடுவார் என்ற  அச்சம் உள்ளதா? எனக் கேள்வி யெழுப்பினார். கேள்விக்கு பதிலளிக்காத குஷ்பூ  முன்னதாக செய்தியாளர்களிடம் குஷ்பூ பேட்டி அளிக்கும் போது, தமிழ கத்தில் அண்ணா பல்கலைக் கழ கத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலி யல் குற்றத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள். இதேபோல் மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளன. இதற்கான போராட்டத்தை எப்போது நடத்துவீர்கள் என்ற கேள்விக்கு, பதிலளிக்காமல் அவர் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்பதில் தவறில்லை. அதே நேரத்தில், 2018-ஆம் ஆண்டு முதல்  இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட  பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்  பதிவாகியுள்ளன. 2019-ஆம் ஆண்டு  504 பாலியல் வழக்குகள் பதிவாகி யுள்ளன. 2020-ஆம் ஆண்டு 485 பாலி யல் வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-ஆம் ஆண்டு 418 பாலியல் வழக்கு கள் பதிவாகியுள்ளன. 2022-ஆம் ஆண்டில் நாட்டில் 419 க்கும் மேற்பட்ட  வழக்குகள் அல்லது மாதத்திற்கு சுமார் 35 வழக்குகள் பதிவாகியுள்ளன, 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம்  தேதி வரை  202 பாலியல் வழக்குகள்  பதிவாகியுள்ளன. இதில் பெரும் பாலான வழக்குகள் உத்தர பிரதேசம்,  குஜராத் என்று பாஜக ஆளும் மாநி லங்களில் அதிகமாக நடைபெற்றுள் ளது. இவற்றிற்கெல்லாம் வாய் திறக்காதவர்கள்- மணிப்பூரில் பொது வெளியில் இரண்டு பெண்கள் நிர்  வாண ஊர்வலமாக அடித்து இழுத்து  வரப்பட்ட சம்பவத்திற்கு வாய் திறக்காதவர்கள், தற்போது சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தையொட்டி அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஊர்வலம் நடத்துகின்றனர்.