சிலிண்டருக்கு வழங்கப்படும் ரூ.1,205-ஐ முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். பிரதான அங்கன்வாடி மையங்களை சிறு மற்றும் குறு மையங்களாக மாற்றுவதையும் பிரதான மையத்தோடு இணைப்பதையும் கைவிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் நலன், வெயிலின் தாக்கம், தற்போது பரவி வரும் காய்ச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கோடை விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மாவட்டத் தலைவர் எஸ். செல்வராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.தேவமணி, கே.அனுசுயா பி.தமிழ்ச்செல்வி ஜி. பாலசரஸ்வதி, சிஐடி மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் சிலிண்டருக்கு ரூ.1,205- வழங்க வேண்டும், மின்கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் பி.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.பிரேமா கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.