அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை, அக்.13 - மதுரையை சேர்ந்த அங்கன் வாடி ஊழியர் அம்சவள்ளியின் உயிரிழப்புக்கு காரணமா னவர்களை கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாது காப்பை கருத்தில் கொண்டு மாற்றுத்துறைப் பணிகளில் ஈடு படுத்துவதை கைவிட வேண்டும். மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் வியாழனன்று மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே நடை பெற்ற கூட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், அங்கன் வாடி ஊழியர் சங்க மாநிலப் பொரு ளாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, பொரு ளாளர் எஸ்.சவரியம்மாள், துணைத் தலைவர் பி.சந்திரா, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ரேவதி உள்ளிட்டோர் பேசினர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணைத் தலை வர் அகிலாண்டேஸ்வரி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க மாவட்டச் செயலா ளர் சித்ரா, சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் ஆகி யோர் பேசினர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.தவமணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகை யன், அமைப்பின் மாவட்டச் செய லாளர் ஏ.பிரம்மா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரம்பலூர் பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்க மாவட்டத் தலைவர் மேனகா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் மணி மேகலை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.