சென்னை, ஜூலை 30 - 5500 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி கேட்டு சென்னையில் போராட்டம் நடத்த வந்தவர்களை காவல்துறையினர் வளைத்து வளைத்து கைது செய்த னர். மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்று கின்றனர். 2 மணி நேர பணி என நிய மிக்கப்பட்ட ஊழியர்கள் 8 மணி நேரத்திற்கு மேலாக வேலை வாங்கப் படுகின்றனர். துறை சார்ந்த பணி மட்டு மின்றி பிற துறை பணிகளையும் செய்கின்றனர். நாளொன்றுக்கு 183 ரூபாய் (மாதம் சுமார் ரூ.5500) ஊதியத்தில் பணியாற்றும் இந்த ஊழி யர்கள் இதிலிருந்து உபகரண பரா மரிப்பு, எழுது பொருட்கள், போக்கு வரத்து செலவுகளை செய்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், ஒன்றிய அரசு சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களை பணி வரன்முறை படுத்த வேண்டும். மாத ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், ஊதியத்தை மக ளிர் திட்டத்துடன் வழங்குவதை கை விட்டு, வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வா யன்று (ஜூலை 30) சென்னை தேனாம் பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்காக சென்னை நோக்கி வந்த வர்களை காவல்துறையினர் வழி நெடுகிலும் கைது செய்தனர். காவல் துறையின் தடைகளை மீறி வந்த வர்களை சென்னையில் குழந்தை களோடு வளைத்து வளைத்து கைது செய்தனர். இவற்றையெல்லாம் மீறி மக் களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன், “காவல்துறை அணுகுமுறையால் மாற்றுத்திற னாளி உள்ளிட்ட பலரும் பாதிக்கப் பட்டுள்ளனர். காவல்துறை முதல் நாள் அனுமதி தந்துவிட்டு திடீரென்று அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கடந்த 16ஆம் தேதியும் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை இதேபோன்று நடந்து கொண்டது. இதுதொடர்ந்தால் காவல் துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொழிற்சங்க இயக்கம் வலுவான போராட்டம் நடத்துவது தவிர்க்க முடி யாததாகிவிடும் என்றும் அவர் கூறி னார். இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில நிர்வாகிகள் கே.சி. கோபி குமார், எஸ்.கே.மகேந்திரன், ஏ.கிருஷ் ணமூர்த்தி, பா.பாலகிருஷ்ணன், தனலட்சுமி, வி.குப்புசாமி, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.