தஞ்சாவூர், மே 9- பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கொட்டப்படும் நெகிழி குப்பைகளாலும், விடப்படும் கழிவு நீராலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வரு கிறது. வாய்க்காலுக்குள் குப்பைகளை கொட்டும், கழிவு நீர் விடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி யில் ஆனந்தவல்லி என்னும் கல்ல ணைக் கால்வாய் கிளை வாய்க்கால், நகரின் மையத்தில் ஊருக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த வாய்க்கால், ஆவணம் அருகே கல்ல ணைக் கால்வாயின் பிரதான வாய்க்கா லில் இருந்து, கிளை வாய்க்காலாக பிரிந்து மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, செங்கொல்லை, நாட்டா ணிக்கோட்டை வழியாக கொரட்டூர் ஏரி யில் சென்று சேர்கிறது. இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்க ணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுவதோடு, பேராவூரணி பெரிய குளம் ஏரிக்கு முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. மேலும் இப்பகுதி ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஜீவ ஊற்றாகவும் உள்ளது. கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கும் பொழுது, இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும். தற்போது மேட்டூரில் தண்ணீர் இல்லாத தாலும், கல்லணை மூடப்பட்டதாலும், கிளை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப் பட்டு வாய்க்கால் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், பேராவூரணி நகர் பகுதியில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள் ஆனந்தவல்லி வாய்க்கா லின் உள்புறத்தில் கொட்டப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும் பழைய பேருந்து நிலையம் முதல் நாட்டாணிக் கோட்டை வரை குடியிருப்போர், தங்கள் வீடுகளின் கழிவு நீரை குழாய் பதித்து ஆனந்தவல்லி வாய்க்காலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள னர். இதனால் ஆனந்தவல்லி வாய்க்கால், கழிவுநீர் சாக்கடை வாய்க்காலாக மாறி வருகிறது. மேலும் பல இடங்களில் ஷட்டர், துருசு சேதமடைந்தும் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் உடைந் தும், பக்கவாட்டு சுவர், படிக்கட்டுகள் சேதம் அடைந்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறையினர் உரிய மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், ஆனந்த வல்லி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்றவும், சாக்கடை கழிவுநீர் விடாமல் தடுக்கவும், அவ்வாறு நெகிழி, குப்பை களை கொட்டுவோர், கழிவு நீர் விடு வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். இதுமட்டுமின்றி வாய்க்காலை பராமரிப்பு செய்யவும், இதனைக் கண்டு கொள்ளாமல், நோய் பரவக் காரண மாக இருக்கும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து கூண்டோடு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.