நாகப்பட்டினம், ஜூன் 10- நாகப்பட்டினம் நகராட்சியின் முக்கிய சாலையான நீலா தெற்கு வீதியில், பாதாளச் சாக்கடை பொங்கி வழிகிறது. இதில் நாகப் பட்டினம் நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் நகராட்சியில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய சாலை நீலா தெற்கு வீதி. இந்த சாலையில் எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் உள்ளன. பல அரசு அலுவலகங்கள் உள்ளன. நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. இது கடைத் தெருவை இணைக்கும் சாலையாகவும் இருந்து வரு கிறது. வேதாரண்யம், திருத்துறைப் பூண்டி, தஞ்சாவூர் உள்ளிட்ட மார்க்கங்களில் வரும் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன. வருடக் கணக்கில் கிடக்கும் பழுதடைந்த சாலை தேசிய மேல்நிலைப் பள்ளி யில் இருந்து, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை உள்ள அந்த சாலை சுமார் 300 மீட்டர் தூரம் உள்ளது. ஆண்டுக்கணக் கில் இச்சாலை பழுதடைந்து உள்ளது. எப்போது பார்த்தாலும் குண்டும் குழியுமாக மிக மோச மான நிலையில் காணப்படுகிறது. வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏதேனும் நிகழ்ச்சி கள் என்றால் அப்பகுதியில் போக்கு வரத்து மிகவும் பாதிக்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்ப வர்கள், நிறுத்துவதற்கு இடமின்றி மக்கள் சாலை ஓரத்தை பயன்படுத் துகின்றனர். இது பாதசாரிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது.
பொங்கி வழியும் பாதாள சாக்கடை
அந்தச் சாலையின் முக்கிய பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டது. அதன் கான்கி ரீட் தளத்தின் மேல்பகுதியில் இருந்து பாதாள சாக்கடையின் கழிவுநீரானது பொங்கி வழி கிறது. பார்ப்பதற்கு சாலையின் நடுவே ஒரு குளம் போல் காட்சி யளிக்கிறது. வயதானவர்கள், பள்ளி மாணவர்கள், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உள்ளிட்டோர் கழிவு நீர் கலந்த சாலையை கடந்து சென்று, மிகுந்த சிரமத்திற்கு ஆளா கின்றனர். நாகப்பட்டினம் நகரத்தில், பப்ளிக் ஆபீஸ் ரோடு, நீலா கீழ வீதி, கடைத்தெரு உள்ளிட்ட பகுதி களில் உள்ள பாதாளச் சாக்கடை யின் கான்கிரீட் தளங்கள் வழியாக கழிவு நீரானது பொங்கி வழிகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் கடு மையாக பாதிக்கப்படுகிறது. குப்பை கிடங்கிலிருந்து வெளிவரும் புகை நாகப்பட்டினம் மேலக்கோட்டை வாசல் பகுதியில் நகராட்சியின் குப்பை கிடங்கு உள்ளது. நாகை நகரத்தின் நுழைவுப் பகுதியாக இப்பகுதி உள்ளது. இந்த பகுதி யில்தான் குப்பை கிடங்கும் உள்ளது. இதிலிருந்து வருகிற துர்நாற்றமானது, நகரத்தில் நுழை பவர்களை முகம் சுளிக்க வைக் கிறது. தற்போது அந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிந்த வண்ணம் உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்ட மாக காட்சியளிக்கிறது. குழந்தை கள், இதய நோயாளி, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் சுவாச கோளாறு ஏற்பட்டு மருத்து வமனைக்கு செல்லக்கூடிய அபா யம் உள்ளது. இதுகுறித்து பலமுறை செய்தி ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்க ளில் தகவல் வெளிவந்தும், தற்கா லிக நடவடிக்கை மட்டும் எடுத்து விட்டு, நிரந்தர தீர்வு காணாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது. இதுகுறித்து சிபிஎம் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் கூறுகையில், “நகராட்சி நிர்வா கத்திற்கு பலமுறை தகவல் அளித் தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மக்களின் அன்றாட நடவடிக் கைக்கு கேடு விளைவிக்கும் செயல். உடனே நகராட்சி நிர்வாகம், அந்த சாலையை முறையாக செப்ப னிட்டு தார்ச் சாலை அமைத்தும், பொங்கி வழியும் பாதாளச் சாக்க டையை பழுது நீக்கியும் தர வேண்டும். புகைமூட்டமாக காட்சி யளிக்கும் குப்பை கிடங்கை சரியாக பராமரிக்க வேண்டும்” என்றார்.