districts

img

விவசாயக் கருவிகள் செய்யும் உடனடி பட்டறை

பாபநாசம், பிப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் அருகி லுள்ள பகுதிகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் குடும்பத் தோடு தங்கி அரிவாள், கடப்பாரை, மண்வெட்டி,  கோடாரி உள்ளிட்ட விவசாயம் மற்றும் வீட்டிற்குத்  தேவையான கருவிகளை உடனே தயாரித்து, விற்பனை  செய்து வருகின்றனர். முன்பு கிராமங்களில், விவசாயத் தேவைகளை  பூர்த்தி செய்ய பட்டறைகள் இருந்தன. நாளடை வில் அதன் தேவை குறைந்ததால், கருவிகளை வாங்க  விவசாயிகள் நகரங்களுக்குச் சென்றனர். இந்நிலையில் வட மாநிலத் தொழிலாளர்கள் சிறு நகரங்களில் தங்கி,  தேவையான கருவிகளை உடனே தயாரித்து தருவ தால், விவசாயிகள் இவற்றை வாங்க ஆர்வம்  காட்டுகின்றனர்.