போக்குவரத்து பாதிப்பு தஞ்சாவூர், நவ.3 - விடுமுறை நாட்கள் காரணமாக, தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்கள் கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மிக அதிகமாக இருந்த தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு அக்.30 ஆம் தேதி பிற்பகல் முதல் விடுமுறை அறி விக்கப்பட்டது. இதனால், சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோல, தஞ்சாவூர் பெரிய கோயிலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர் களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். மேலும், பெரியகோயில் எதிரே உள்ள ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்ட வற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. பெரும்பாலான சுற்றுலாப் பயணி கள் கார், வேன், பேருந்துகளில் வருவதால் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் வாக னங்களால் நிரம்பியது. இதனால் திலகர் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதி மன்ற சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறம் நெடுகிலும் வாக னங்கள் நிறுத்தப்பட்டன. பெரிய கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால், பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. காவலர்களின் எண்ணிக்கை யும் குறைவாக இருந்ததால் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடி யாமல் திணறினர். இதனிடையே, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங் களுக்கு வழி ஏற்படுத்தி அனுப்புவதில் போக்குவரத்துக் காவலர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.