districts

img

தில்லைநகரில் அம்பேத்கர் நூலகம் திறப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.16- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைக் கலைஞர் கள் கிளை முதலாம் ஆண்டு  விழா மற்றும் அண்ணல் அம் பேத்கரின் 133 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தில்லை நகர் டுலைட் நடனப் பள்ளி யில் ‘அண்ணல் அம்பேத்கர் நூலகம்’ திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு நடன அமைப்பாளர் பிரதாப் தலைமை வகித்தார். கிளைப்  பொருளாளர் சந்துரு வர வேற்றார். நூலகத்தை நிறு வனர் விமலா திறத்து வைத் தார். தமுஎகச மாவட்டத் தலைவர் சிவ.வெங்கடேஷ் உரையாற்றினார். நிர்வாகி கள் பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர்  தூவி மரியாதை செலுத்தப் பட்டது. கிளைச் செயலாளர் லாரன்ஸ் லூக் நன்றி கூறி னார்.