புதுக்கோட்டை, ஜன.7 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டத்தால், அன்னவாசல் பல்லூரணி குளத்தை தூர்வாரி, தடுப்புச்சுவர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாச லில் உள்ள பல்லூரணிக் குளம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படா மல் கிடந்தது. இதனால், இந்தக் குளத்தில் போதுமான அளவுக்கு தண்ணீரை சேமிக்க முடியவில்லை. மேலும், துர்நாற்றம் வீசி அக்கம்பக்கத்தினருக்கு பல்வேறு ஒவ்வா மைகளை ஏற்படுத்தி வந்தது. பல்லூரணி குளத்தை தூர்வாரி, நான்கு புறமும் தடுப்புச் சுவர் அமைத்து பராமரிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியின ரும், அப்பகுதி பொது மக்களும் தொடர்ச்சி யான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 15.10.2023 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குளத்தை மராமத்து செய்து மண் அரிப்பு ஏற்படாமல் நான்குபுறமும் தடுப்புச் சுவர் ஏற்படுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும், அன்னவாசல் பேரூராட்சி நிர்வாகமும் நடத்திய பேச்சுவார்த்தையில், ‘கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்’ என அறி விக்கப்பட்டது. தற்போது ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. நடைபெற்று வரும் பணிகளை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஜோஷி, எஸ்.சோலையன், விதொச ஒன்றியச் செய லாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.