districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருவப்பூர் ரயில்வே மேம்பாலம்: நிலமெடுப்புக்காக ரூ.41.24 கோடி ஒதுக்கீடு

புதுக்கோட்டை, டிச.11 - புதுக்கோட்டை மாநகரின் முக்கியமான கோரிக்கைகளில் ஒன்றான திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க, முதல் கட்ட மாக நிலமெடுப்புப் பணிகளுக்கு ரூ.41.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாநில நெடுஞ் சாலைத் துறை அரசாணை பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாநகரின் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த, திருவப்பூர் மற்றும் கருவப்பில்லான்கேட் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது பிரதானமான கோரிக்கையாகும். நீண்ட காலமாக இந்தக் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தாலும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, வாரியத்தின் பிங்க் புத்தகம் எனப்படும் புத்தகத்தில் இடம்பெறச் செய்து, தொடர்ந்து வலியுறுத்தி ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றுத் தந்தார்.

மதுரையிலிருந்து வந்த ரயில்வே அலுவலர்கள் இடத்தை அளவீடு செய்தும் சென்றனர். அதன்பிறகு, மாநில அரசின் நெடுஞ் சாலைத் துறை மேம்பாலத்துக்கான நிலம் எடுப்பதற்காக தனியே ஆய்வுகளை மேற் கொண்டு அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியது.  இதன்படி, 6,446 சதுரமீட்டர் நிலம் தனி யார் பட்டா நிலம் என்றும், 7,953 சதுர மீட்டர்  நிலம் அரசுப் புறம்போக்கு நிலம் என்றும்  வரையறுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சி யாக, தனியார் இடத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலை நிலமெடுப்புச் சட்டப்படி கைய கப்படுத்த ரூ.41.24 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான அரசாணையை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அத்து டன், அரசு புறம்போக்கு நிலத்தை உரிய முறைப்படி நிலமாற்றம் செய்யவும் அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் சுமார்  3 மாதத்தில் நிறைவடைந்தால், கட்டுமானப்  பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சா லைத் துறையினர் தெரிவித்தனர்.

புதிய பாரதம் எழுத்தறிவுத் திட்டம்:  தன்னார்வலர்களுக்குபயிற்சி 

பாபநாசம், டிச.11 - புதிய பாரதம் எழுத் தறிவுத் திட்டத்தின்கீழ் பாபநாசம் ஒன்றியத்தில் கண்டறியப்பட்ட எழுத் தறிவில்லாத 433 பேர் களுக்கு பயிற்சியளிக்க தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது. பாப நாசம் வட்டார வள மை யத்தில் ஆசிரியை அமுதா 21 தன்னார்வ லர்களுக்கு பயிற்சியளித் தார். முன்னதாக பயிற்சியை வட்டார  வள மைய மேற்பார்வை யாளர் (பொறுப்பு) முரு கன் தொடங்கி வைத்தார்.

வருமான வரி  விழிப்புணர்வு கூட்டம்

அறந்தாங்கி, டிச.11-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்த சங்க அலுவல கத்தில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

 புதுக்கோட்டை வரு மான வரி அலுவலர் சுரேஷ்குமார் தலைமை யில் நடந்த கருத்தரங்கில், அறந்தாங்கி வணி கர்கள் கலந்து கொண்டு  வருமான வரி சம்பந்த மான கேள்விகளை எழுப்பினர். இதற்கு வரு மான வரி அலுவலர் விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் வருமான வரி ஆய்வாளர் பத்ம வேணி, வருமான வரி கண்காணிப்பாளர் வேலு மற்றும் வருமான வரி உதவியாளர் ரமேஷ், அறந்தாங்கி வர்த்தக சங்கத் தலைவர் தங்க துரை, செயலாளர் சுரேஷ் குமார் உட்பட வணி கர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மகாகவிக்கு மரியாதை

பாபநாசம், டிச.11 - மகாகவி பாரதியா ரின் பிறந்த நாளை யொட்டி, பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொ டக்கப் பள்ளியில், பாப நாசம் வட்டார வள மேற் பார்வையாளர் (பொ)  முருகன், பாரதியாரின் படத்திற்கு மாலையணி வித்து,  மரியாதை செலுத் தினார். இதில் பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உட்பட மாண வர்கள் பங்கேற்றனர்.

மாதர் சங்கம் பிரச்சாரம்

தூத்துக்குடி, டிச.11- விலைவாசி உயர் வுக்கு எதிராக மாதர் சங்கம் சார்பில் தூத்துக் குடி புறநகர் தோப்புத் தெரு பஜாரில் பிரச்சாரம் நடைபெற்றது. புறநகர் தலைவர் முத்துபேச்சி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி  பூமயில், புறநகர் செயலா ளர் பா. சரஸ்வதி ஆகி யோர் பேசினர்.

வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி பலி

அறந்தாங்கி, டிச.11 - வீட்டின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் மேலக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன்.

இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி அம்மு, மகன் ஆதிஸ்வரன், மகள் இனியவள் ஆகியோர் அவர்களது மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் இரவு உறங்கியுள்ளனர். அப்போது  அதிகாலை 5 மணியளவில் வீட்டின் பக்கவாட்டுச் சுவர் ஈரப்பதத்தின் காரணமாக இடிந்து 5 வயது சிறுமி இனிய வள் மீது விழுந்துள்ளது. உறக்கத்தில் இருந்த அவரது தாயார் எழுந்து மகளை மீட்பதற்குள் இனியவள் உயிரி ழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் உடல் கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தொடர்ந்து பெய்த  கனமழையால், அவர்களது வீட்டின் மண் சுவர்  ஈரப்பத மாக இருந்துள்ளது. அதனால்தான் சுவர் இடிந்ததாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.