districts

img

ஏ.கே.பழனிசாமி நினைவு தினம்

ஈரோடு, செப். 23- அர்ப்பணிப்பு மிக்க  போராளியான மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  தோழர் ஏ.கே.பாலசுப்பிர மணியின் 3ஆம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட் டம் ஆப்பக்கூடலில் ஞாயி றன்று நடைபெற்றது. டைலர் பாலு குட்டி என் னும் ஏகே.பாலசுப்ரமணியம்  கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  தன்னை இணைத்துக் கொண்டவர். விவசாயி கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை மக்கள் நலனுக் காக நடத்திய போராட்டங்களில் தன்னை முன் வரிசையில் நிறுத்திக் கொண்டவர். மதவெறி, சாதி வெறி, தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக களம் கண்டவர். தீக்கதிர் நாளித ழின் முகவராக செயல்பட்டு எழுதுகோல் பரிசு பெற்றவர். ஏ.கே.பாலசுப்பிரமணியின் மூன்றாம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் ஆப்பக்கூடலில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், ஏ.ஜி.கொளந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், முன்னாள் பேரூராட்சி தலை வர் கே.துரைராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பழனிசாமி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஜெகநாதன், பவானி தாலுகா செய லாளர் எஸ்.மாணிக்கம், அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நிகழ்வில் புதுவை சப்தர் ஹஸ்மி கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிக ளும் இடம் பெற்றன.