பெரம்பலூர், ஆக.1-
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நல சங்க மாவட்டச் செயலா ளர் த.அருண்குமார் தலைமை வகித்தார். ஆண்டிமுத்து அறக்கட்டளை திட்ட மேலா ளர் எம்.கணேசன், இந்தோ அறக்கட்டளை ரெ.செல்வகுமார் மற்றும் வெ.நாதன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். அரசு ஊழி யர் சங்கம் ப.குமரிஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஸ், சிபிஐ வெ. ஜெயராமன், வழக்கறிஞர் இரா.ஸ்டா லின் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சத வீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள 186 நம்பிக்கை மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தனியார்மயமாவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.