தஞ்சாவூர், மே 16-
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட் டைகள் விரைவில் அமைக்கப்படும் என்றார்
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சா லைகள் அமைப்பதற்காக ரூ.ஆயிரம் கோடியை தமிழ்நாடு முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது. விவசாயிகளிடம் கலந்து பேசி விவ சாயம் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில்கள் என்னென்ன கொண்டு வரலாம் என முடிவு செய்யப்படும். நிச்சயமாக விரை வில் நல்ல செய்தி வரும். டெல்டா பகுதியில் நிலம் கிடைப்பது மிகவும் கடினம். என்றாலும், அதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகிறோம்.நிலம் கொடுக்க நில உரிமையாளர்கள் முன்வந்தால் மிகவும் மகிழ்ச்சி
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது திருவையாறு தொகுதி சட்டமனற் உறுப்பினர் துரை. சந்திரசேகரன், மேயர் சண். ராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.