districts

img

சாலை, குடிநீர் வசதி செய்து தரக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.27 -  சாலை, குடிநீர் வசதிகளை செய்து தரக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம்  சார்பில், வெள்ளிக்கிழமை பெருமகளூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் சி.சுந்தரம் தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளரும், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன், சிஐடியு முன்னாள்  மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.வாசு, தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.ஆர்.கே.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், “பெருமகளூர் பேரூ ராட்சியில் நூறு நாள் வேலையை துவக்கி முழுமையாக வேலை வழங்கப்படவில்லை. அதில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். கே.ஆர். புரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை மேம்படுத்த வேண்டும். சுடுகாட்டிற்குச் செல்ல  சாலை அமைத்திட வேண்டும். மயானக் கொட்டகை அமைத்து தர வேண்டும். பூந்தோட் டம் பகுதியில் சாலை வசதி அமைத்து தர  வேண்டும்.  குடிநீர் குழாயை பழுது நீக்கி சரி செய்ய  வேண்டும். புதிய வழித்தடத்தில் பேருந்து களை இயக்க வேண்டும். தூராங்குடி சுடு காட்டிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அண்ணா நகர் -காந்திநகர் பழுத டைந்த கீழ்மட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும். பாப்பான்குளம் கரையை சீர மைத்து, மதகிற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பெருமகளூர் பேரூ ராட்சியில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ள மக்களுக்கு நகர்ப்புற குடியிருப்பு பகுதியில் வீடு வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.