திருச்சிராப்பள்ளி, ஆக.7 - 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தினக் கூலியாக பணிபுரியும் அனைவரை யும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். மாநக ராட்சி, நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள், டி.பி.சி தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச தினக்கூலி வழங்க வேண்டும். பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய நவீன இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆக.27 அன்று சென்னை நகராட்சி நிர்வாக இயக்கு நர் அலுவலகம் முன்பு போராட்டம் நடை பெற உள்ளது. இதையொட்டி சிஐடியு திருச்சி மாநக ராட்சி தொழிலாளர் சங்கம், திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் சங்கம் சார்பில் மண்டல அளவி லான போராட்ட ஆயத்த மாநாடு செவ்வா யன்று திருச்சியில் நடந்தது. மாநாட்டிற்கு திருச்சி மாநகராட்சி தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் இளைய ராஜா தலைமை வகித்தார். சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பன்னீர் செல்வம், திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், மாவட்ட பொறுப்பாளர் ராஜு, மாவட்ட உதவி தலை வர் மாரியப்பன், உள்ளாட்சி தொழிலாளர் சங்க புதுக்கோட்டை மாவட்ட பொதுச் செய லாளர் முகமது அலிஜின்னா, திண்டுக்கல் மாவட்ட உதவி தலைவர் மாரியப்பன், பெரம் பலூர் மாவட்டச் செயலாளர் ஆனந்தன், அரியலூர் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினார். மாநில சம்மேளன தலைவர் கே.ஆர்.கணேசன் சிறப்புரை யாற்றினார். மாநாட்டில் திருச்சி மாநகர்-புறநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாநகராட்சி தொழி லாளர் சங்க மாவட்டப் பொருளாளர் டோம்னிக் நன்றி கூறினார்.