மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த சில நாட்களாக கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா வருபவர்கள் அச்சத்துடன் திரும்பிச் செல்கின்றனர். டேனிஷ் கோட்டையையொட்டி கடல் அலைகள் மோதி வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம், கடற்கரையில் விளையாடக்கூட அச்சமாக இருப்பதாக வெளியூரை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். கடந்த 16 மாதங்களுக்கு பிறகு தற்போது கடல் உள்வாங்கி இருப்பதாகவும், இதுபோன்று கடல் உள்வாங்குவது இயற்கையான ஒன்று என தரங்கம்பாடியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.