தஞ்சாவூர், செப்.4- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், திங்கள்கிழமை நடந்த குறைதீர் கூட்டத்தில், பட்டுக்கோட்டை பாலிடெக் னிக் சாலை, நரியம்பாளையம் தெற்குப் பகு தியைச் சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற் பட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது, பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக, நரியம்பாளை யத்தின் தென்புறம் வேலை நடைபெற்று வருகிறது. இதன் அருகில் 32 குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பேருந்து நிலையம் அமைக்கும் பணி, சாலை விரிவாக்கம் ஆகிய பணிகளுக்காக எங்களை அங்கிருந்து வெளியேற்றி, பூவாணம் கிராமத்தில் இடம் ஒதுக்கி உள்ளதாகத் தெரிகிறது. நாங்கள் ஆண்டாண்டுகளாக குடி யிருந்து வரும் நரியம்பாளையத்திற்கும், பூவாணம் கிராமத்திற்கும் 15 கி.மீ. தொலைவு இருப்பதால் நாங்கள் அனை வரும் அங்கு செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். குழந்தைகளின் பள்ளி, கல்லூரி படிப்பு பாதிக்கப்படும். மேலும், போதிய பேருந்து வசதியும் கிடையாது. எனவே, எங்களுக்கு அருகில் உள்ள ஆலடிக்குமுளை பக்கத்தில் உள்ள முனிக் கோவில் பின்புறம் நத்தம் புறம்போக்கு உள்ளது. அந்த இடத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.